எம்மதமும் சம்மதம் என்ற கூற்றை
உண்மையாக நிரூபித்துக் காட்டியவன்
உருவம் தெரியாதவன் இந்த உலகையே
ஆட்டிப் படைக்கிறான் அமைதிப் புரட்சியுடன்
நாற்காலி மீது அதிக மோகம் கொண்டவனோ
என்று எண்ணம் தோன்றுகிறது
அனைவரின் இதய சிம்மாசனத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளதால்
இன்பத்தில் பின்னால் நின்று சந்தோசப்படுவான்
துன்பத்தில் முன்னால்
நின்று எதிர் கொள்வான்
மழலைச் செல்வங்கள் என்றும் பாராமல்
ஆக்கிரமித்துக் கொள்வான்
மரணம் வரை கூடவே சென்றிடுவான்
இரத்த பந்தம் ஏதும் இல்லாதவன்
ஆனால் இரத்தத்தையே கொடுக்கும் சொந்தக்காரன்
ஐந்தறிவோ ஆறறிவோ எவ்வுயிராயினும்
எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் அரிதாரம் பூசிக்கொள்ளும் ஆன்மாவிற்கு சொந்தக்காரன்
இவன் மலரும் சத்தம் கேட்பதில்லை
மலர்ந்த பிறகு உதிரவும் இல்லை
யார்தான் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை
இவனுக்கு
நட்பு
என்று... !
No comments:
Post a Comment