Monday, September 7, 2020

நட்பு




எம்மதமும் சம்மதம் என்ற கூற்றை

உண்மையாக நிரூபித்துக் காட்டியவன்


உருவம் தெரியாதவன் இந்த உலகையே

ஆட்டிப் படைக்கிறான் அமைதிப் புரட்சியுடன்


நாற்காலி மீது அதிக மோகம் கொண்டவனோ

என்று எண்ணம் தோன்றுகிறது

அனைவரின் இதய சிம்மாசனத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளதால்


இன்பத்தில் பின்னால் நின்று சந்தோசப்படுவான்

துன்பத்தில் முன்னால் 

நின்று எதிர் கொள்வான்


மழலைச் செல்வங்கள் என்றும் பாராமல்

ஆக்கிரமித்துக் கொள்வான் 

மரணம் வரை கூடவே சென்றிடுவான்


இரத்த பந்தம் ஏதும் இல்லாதவன்

ஆனால் இரத்தத்தையே கொடுக்கும் சொந்தக்காரன்


ஐந்தறிவோ ஆறறிவோ எவ்வுயிராயினும்

எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் அரிதாரம் பூசிக்கொள்ளும் ஆன்மாவிற்கு சொந்தக்காரன்


இவன் மலரும் சத்தம் கேட்பதில்லை

மலர்ந்த பிறகு உதிரவும் இல்லை

யார்தான் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை 

இவனுக்கு 

நட்பு 

என்று... !

No comments:

Post a Comment

Followers