கிறுக்கல்கள்
Wednesday, March 31, 2010
நினைவாலயம்
நண்பர்கள் ஓர் நினைவாலயம்!
எதையும் மறக்கலாம்!
நண்பனையும், நட்பையும் தவிர!!!
முதியோர்
தொலைந்து போன
வாழ்க்கையை,
தேடிக்கொண்டிருக்கின்றனர்
துடிப்பான இளைஞர்கள்
நம்பிக்கை கோல்களுடன்
. . .
"
முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள்
"
ஓட்டு
மொட்டுக்கள் பிரிந்தால்
பூவாகிறது...
நோட்டுக்கள் நகர்ந்தால்
ஓட்டாகிறது!
நட்பின் சுகம்
காகித வார்த்தைகள்
படிக்க வேண்டியவை,
நட்பில் பேசிய வார்த்தைகள்
சுமக்க வேண்டியவை,
படித்தால் மறந்துவிடும்!
சுமந்தால் நிறைந்துவிடும்!!!
நம் மனது
. . .
Tuesday, March 30, 2010
பெண் மனம்
எப்போதும் புரியாத ஓர் புதிர்!
முழுமையாக அறிந்தவர்
எவரும் இலர் இவ்வுலகில்!
Wednesday, March 24, 2010
மகிழ்ச்சியாய் இரு
முள்ளில் தான் வாழ்க்கை
ஆனாலும் சிரித்து
கொண்டிருக்கிறது
"ரோஜா"
சிரிப்பே சிறந்த மருந்து!
மகிழ்ச்சியாய் இரு எப்போதும்!
மெழுகுவர்த்தி
தன்னை அழித்து,
தன்னுள் இருளை கொண்டு,
பிறருக்காக வாழும்
பெருந்தன்மையாளன்!
இவனுக்கு ஓர் நிமிட கண்ணீர் அஞ்சலி!
புகழ்
மரணத்தின் வாயிலிலும்
மறையாத ஓர் ஒளி விளக்கு
இது குன்றின் மேலிட்ட
விளக்கு போல் பாரெங்கும்
பரவும் வல்லமை பெற்றது!
இது மனிதனின் கண்களையும்
மறைக்கும், அவனையும் அழிக்கும்!
இதற்கு மாயங்காதோர் யாரும் இலர்!
Tuesday, March 23, 2010
எது சுதந்திரம்?
சுதந்திர தினத்தன்று,
நமது தேசிய கொடிக்குகூட
சுதந்திரம் கிடையாது??
கயிற்றில் கட்டி இருப்பதால்..
கவிதை
உணர்ச்சி பூர்வமான
சொற்களின்
முழு வடிவம்
வாழ்க்கை
வாழ்க்கை என்ற கடலில்,
முயற்சி என்ற படகில்,
தன்னம்பிக்கை என்ற துடுப்புடன்
நாம் பயணம் செய்கிறோம்!
கரை என்ற வெற்றியை அடைய
தன்னம்பிக்கை, முயற்சியுடன்
வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும்
முயற்சி
உனது குறிக்கோளை
அடைய உதவும்
ஏணிப்படி
சந்தேகம்
மனித வாழ்வை
அழிக்க வந்த
புல்லுருவி...
Sunday, March 21, 2010
முயற்சி
உன் இலட்சியம்,
உன் வாழ்க்கை,
உன் நம்பிக்கை,
இவை அனைத்தும்
இன்று நீ எடுக்கும்
முயற்சியில் அடக்கம்
வாழ்த்து
வாழ்க்கையில் முன்னேற
வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல
வாழ்த்துகளுடன் சேர்ந்த
வார்த்தைகளின் வடிவம்,
இறைவனின் ஆசி!
செயலாக்கம்
நண்பா,
வாழ்க்கையை நேசி,
நேசித்ததை செயல்படுத்த யோசி,
யோசித்ததை செயல்படுத்த யாசிக்கதே!
Saturday, March 20, 2010
நட்சத்திரம்,நிலவு
விண்ணையும் வறுமை
விட்டு வைக்கவில்லை,
கருப்பு துணியில் கிழிசல்கள்,
ஓட்டைகள்....
காதலர் தினம்
மனிதனுக்கென்று ஒரு நாள்
அது பல வகை...
மனங்களுக்கென்று ஒரு நாள்
அது காதலர் தினம்!
ஆசை
ஆசையே
இல்லாத
உலகம்
வேண்டும்
என்ற ஆசை
புத்தருக்கு...
காதல்
வலிக்கும்
இதயத்தை
வலிக்காமல்
வருடிய மயிலிறகு....
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers