Saturday, September 26, 2020

9. SPB இரங்கல் அஞ்சலி கவிதை | S. P. Balasubrahmanyam | SPB RIP Kavithai



கூவும் குயிலும் கூக்குரலிட்டு கதறுகின்றது
குரலில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற ஆணவத்தை அழித்த சங்கீத ஸ்வரப்பிதா சங்கமித்து விட்டதால்

கடைக்கோடி ஜீவனுக்கும் ஓர் சந்தேகம் காதோரம் கேட்ட இசைக்குயிலின் கடைசிப் புதல்வன் கானல் நீராகி விட்டானோ என்று...!

ஒலியின் ஓசைக்கு உயிர்க் கொடுத்தவன் 
ஒளியோடு ஐக்கியமாகி விட்டான் ஆதவன் அஸ்தமிக்கும் போது தாலாட்டுப் பாட ஆளில்லை என்பதால் தானோ ....!

பல மேடையில் நின்று கொண்டே இசை நிகழ்ச்சி நடத்தியவரே
பாதாள மேடையில் துயில் கொள்ள சென்று விட்டாய் !!!

போதும் என்று நினைத்ததாலோ?

ஆண்டவனும் உன் இசைக் கேட்டு உறங்கினான் 
நீ உறங்க யார் இசை மீட்டினார்கள்....

வார்த்தைகளுக்கு குரலில் 
உயிர் கொடுத்தவனே
உன் குரலை யாரிடம் கொடுத்து விட்டு சென்றாய்
பாரதமாதாவின் மடித்துயில....!

உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் உயிர் பிரிந்தது என்பார்கள்,
உனக்கோ குரலில் தானே ஆன்மாவை வைத்தான் ஆண்டவன்
என்றும் உன் குரல் ஒலித்துக் கொண்டு தானே இருக்கும்
பிறகு எதை வைத்து மறைந்தாய் என்று ஒப்புக் கொள்வது ....

வாழ்க உன் புகழ்….
இந்த உலகம் உள்ள வரை !!!

No comments:

Post a Comment

Followers