ஆட்டி வைத்த பாசம்
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
Friday, April 2, 2010
நட்பு
பழகுவதற்கு இனிமை,
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,
இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .
இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!
எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!
இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,
குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,
என் நண்பர்களின் மனம் . . .
பாசத்தில் புதுமை,
இதில் இல்லை வறுமை,
பிரிவில் எல்லோர் மனதிலும் வெறுமை,
இவையெல்லாம் நட்பின் சொந்தம் . . .
இரத்த பாசம் இல்லாத உறவு,
ஆனால் இரத்ததை கொடுக்கும் உறவு!
எதிர்பார்க்காமல் வருவது நட்பு,
எதிர்பார்த்தால் வருவது வெறுப்பு!
இரத்தம் சிந்தினால் அழுவது பல மனங்கள்,
குடும்பத்தை தவிர,
உண்மையாக அழுவது ஓரே ஒரு மனம்,
என் நண்பர்களின் மனம் . . .
Thursday, April 1, 2010
காதல் தோழி
வலிக்கும் போது வருடுவாள்
இதயத்தை ,
உருகும் போது துடைப்பாள்
கண்ணீரை ,
தள்ளாடும் போது ஊன்றுகோல்
அவள் ,
நட்புக்கு தோழியாக இருப்பாள் ,
மனதில் காதல் இல்லாமல்
இருந்திருந்தால். . . . . ,
நட்பு (அ) காதல்
நூறு கோடி இதயங்களில்
அமைதி புரட்சி
செய்தவன்
இவன் மலரும் சத்தம்
கேட்பதில்லை,
மலர்ந்த பிறகு
உதிரவும் இல்லை
Subscribe to:
Posts (Atom)