இந்த தலைப்பு இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல , நம் முன்னோர்கள் காலத்தில் நடந்ததையும் மேற்கோளாக காட்டலாம் , கஜினி முகமது பற்றி அனைவருக்கும் தெரிந்ததே, 17 முறை படையெடுத்து 18 வது முறையாக வெற்றிக் கொண்டார் என்பது .
அவர் முடியாது என்று சோர்ந்து போயிருந்தால் வெற்றி என்பது கிடைத்திருக்குமா? முயற்சி என்ற விடியலை நாம் அனைவரும் சோர்ந்து போகாமல் என்றும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
மண்ணில் புதைக்கும் விதை சோர்ந்து போயிருந்தால்
சூரிய வெளிச்சம் என்னும் விடியலை பார்க்க முடியுமா,
உளியின் வலியை தாங்க முடியாமல் பாறையானது சோர்ந்துப் போயிருந்தால் கையெடுத்து கும்பிடும் கடவுள் சிலையும் கலை நயத்தோடு காணும் சிலையும் நமக்கு கிடைத்திருக்குமா என்பது ஐயமே !
நம் கண்முண்ணே தவழ்ந்து விளையாடும் குழந்தையே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு தான்..!
எத்தனை தடவை தடுமாறி கீழே விழும் போதெல்லாம் சோர்ந்துப் போயிருந்தால் நடை பயில்வது என்பது சாத்தியமன்று. ஒவ்வொரு முறையும் படும் வலியை பொருட்படுத்தாமல் தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல் வெற்றி என்னும் விடியலை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.
நண்பர்களே, வாழ்க்கையில் பல தடைகள் என்றும் உண்டு. தடைகளைப் பார்த்து தடுமாறி போகாமல் நம்பிக்கை என்னும் உயிர்த் துடிப்புடன் முடியும் என்று முயன்று கொண்டே இருந்தால் வெற்றி என்னும் விடியல் நிச்சயம் கிடைக்கும் ,
எத்தருணத்திலும் சோர்ந்து போகாதீர்கள் ! விடியல் உண்டு !
நன்றி!
No comments:
Post a Comment