Thursday, September 3, 2020

குழந்தை


 குதூகலத்தின் இருப்பிடமாய் 

இருப்பவன்

அனைவரின் கவலையையும்

ஒரே நொடியில் தகர்த்து எறிபவன்

இவனிடம் சரணாகதி அடையாதவர் 

எவரும் இல்லை

ஒற்றை சிரிப்பால் உலகையே 

வசியப்படுத்தி வைக்கும் வசியக்காரன்

இவனின் ஒற்றை வார்த்தை கேட்க

அனைவரும் தவம் கிடப்பார்கள் என்றே சொல்லலாம்

தெய்வமே இவனுக்கு அடுத்தப்படி தான்

என்பார்கள் பலரும்

கீழே விழுந்தால் தோல்வியை ஏற்காமல்

முயற்சியுடன் எழுந்து நிற்கும் தைரியக்காரன்

இவனின் அழுகை பலரின் சிரிப்பை போக்கும்

இவனின் சிரிப்பு பலரின் அழுகையை போக்கும்

அனைவரும் இவனிடம் குழைந்து குழைந்து பேசுவதால் தானோ இவனுக்கு பெயர்

“குழந்தை “

No comments:

Post a Comment

Followers