Thursday, April 28, 2011

காதலித்துப் பார்

கனவினை காதலித்துப் பார் 
பல கற்பனைகள் 
உன்னுள் அடங்கும் 

பெற்றோரை காதலித்துப் பார் 
பல பெருமைகள்
உன்னுள் அடங்கும்

நம்பிக்கையை காதலித்துப் பார்
பல முயற்சிகள்
உன்னுள் அடங்கும்

தோல்வியை காதலித்துப் பார் 
பல வெற்றிகள்
உன்னுள் அடங்கும் 

இயற்கையை காதலித்துப் பார்
பல இசைகள்
உன்னுள் அடங்கும்

நண்பனே !

உன்னையே காதலித்துப் பார் 
இவை அனைத்தும் 
உன்னுள் அடங்கும் . . . . !
விழிகளில் வழிந்தோடும் 
கண்ணீரை துடைப்பதற்கு 
ஓடோடி வந்தது 

கரங்கள் அல்ல ....,

எனக்கு முன்னே 
எனக்காக வழிந்தோடும் 
என்னவளின் 

"கண்ணீர்கள் " . . . . !

நட்பு / காதல்

சத்தமில்லாமல் 
பிரிந்த மொட்டு 
பூவாகி சூடிய பின்பும்
வாடாமல் வாசனை 
வீசிக் கொண்டிருக்கிறது.....,

Saturday, April 9, 2011

WORLD CUP 2011

உதிரம் உறைய
உணர்வுகள் கலங்க
விழிகள் வியர்க்க
கரங்கள் உயர
மனங்கள் மலர
...மனசாட்சி மண்டியிட்டு
சொல்கிறது
எங்களை தலை நிமிர
வைத்த வீரர்களுக்கு
சிரம் தாழ்த்தி
வணக்கம் என்று .......!

தேசிய கொடியின் மனசாட்சி :

உதிரம் உதிர
பல அடிகளின் வலியில்
உயர பறந்தேன் அன்று ...
...
உதிரம் உறைய
பல அடிகள் கொடுத்து
உயர பறக்கின்றேன் இன்று ...

எனது சுதந்திரம்
பறிபோனதோ என்று
கவலைப்பட்டேன்
கயிற்றில் கட்டி பறக்க விட்டதால்...

ஆனால்
அது கயிறல்ல
என் வீரர்களின் கரங்கள்
இந்திய ரசிகர்களின் உணர்வுகள் தான்
என்று உணர்த்திய வீரர்களுக்கும்
ரசிகர்களுக்கும் நன்றி ...................................!

" ஒற்றுமையே வலிமை "

காதல்

ஜீன்களில் பல மான்கள்
பட்டாம்பூச்சியாய்  பரந்தவண்ணம் இருக்கிறது!!!!
இதமாய் துடிக்கும் இதய
துடிப்புகளில்....!

அகதிகள்

விடியலை பார்த்ததும்
அனைத்துப் பூக்களும்
தலை நிமிர்ந்து பார்க்கிறது
மழை வராதா என்றல்ல???
இன்றாவது இரை வராதா என்று . . . . .

Followers