Thursday, September 3, 2020

மனைவி


 ஆதியும் அந்தமுமாய் அனைவருக்குள்ளும் வியாபித்திருப்பவள்

இன்முகத்தோடு வரவேற்ப்பாள்

ஈன்ற தாய்க்கு அடுத்தபடியாய்

உரிமையாய் வாதிடுவாள் எனக்காக

ஊட்டி வளர்த்தவர்களாக இருந்தாலும்.,

தனது கண்ணீரை மறைத்து 

எனது கண்ணீரை துடைக்க ஓடி வருவாள்

எத்துன்பத்திலும்..,

தனக்கு பிடித்தவற்றை மறந்து 

எனக்கு பிடித்தவற்றை ஏற்றுக்கொள்வாள்

அது பிடிக்காவிட்டாலும் கூட.,

எல்லோருக்கும் ஓய்வென்று ஒரு நாள்

இவளுக்கோ 

எந்நாளும் ஓய்வில்லா திருநாள்

சுயநலம் கொண்டவளோ என்ற எண்ணம் தோன்றுகிறது 

அன்பு பாராட்டுவதில் அன்னையையே மிஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்..,

கருவறையில் பத்து மாதம் குழந்தையையும் 

மனதறையில் மொத்த காலமும் என்னையும்

சுமக்கிறாள்

மூன்றே மூன்று முடிச்சுக்கு மதிப்பளித்து,


“மனைவியாய்”

No comments:

Post a Comment

Followers