உதிரம் உதிர
பல அடிகளின் வலியில்
உயர பறந்தேன் அன்று ...
...
உதிரம் உறைய
பல அடிகள் கொடுத்து
உயர பறக்கின்றேன் இன்று ...
எனது சுதந்திரம்
பறிபோனதோ என்று
கவலைப்பட்டேன்
கயிற்றில் கட்டி பறக்க விட்டதால்...
ஆனால்
அது கயிறல்ல
என் வீரர்களின் கரங்கள்
இந்திய ரசிகர்களின் உணர்வுகள் தான்
என்று உணர்த்திய வீரர்களுக்கும்
ரசிகர்களுக்கும் நன்றி ...................................!
" ஒற்றுமையே வலிமை "
No comments:
Post a Comment