Sunday, September 27, 2020

காதல்

 சுவாசிக்கும் ஆக்சிஜன் ஹீலியம் வாயுவாக மாறிவிட்டதோ,

கால்கள் தரையை முத்தமிடாமல் மேலெழும்பி பறக்கிறது


இடி இடிக்காமல் வருணன் வராமல் இமைகளை இதமாக மின்னல் தாக்கிய காரணத்தினால் தானோ

இனம்புரியாத உணர்வு இதயத் துடிப்புடன் நட்பு பாராட்டுகின்றது


பெருவெடிப்புக் கொள்கையின் மூலம் உலகம் தோன்றியது என்று கூறும் அறிவியல்

எந்தக் கொள்கையின் மூலம் இவன் தோன்றினான் என்று கூற மறுக்கின்றது....,


ஆதாம் ஏவாள் சாப்பிட்ட ஆப்பிளின் மிச்சத் துளிகள் அழியா வரத்தை ஆண்டவனிடம் பெற்று விட்டதோ ....!

புதுவிதமான உணர்வை உடலெங்கும் பரவச் செய்கின்றது....,


மங்கிய பார்வையின் வெளிச்சத்தில் மங்காத ஆதவனாய் காட்சி அளிக்கிறான் கைப்பேசியின் திரையில் ....,


ஏட்டில் படிக்காதவனையும் ஏற்றமெடுத்து கவி பாட வைக்கும் வல்லவன்


பல வருடங்களாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை பேரும் புகழுடன் கம்பீரமாக நிற்க வைத்த காரணக்கர்த்தா இவன்

ஒரு ஆணையும் தாயாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்


இவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்

காலம் உள்ள வரை தானும் இருப்பேன் என்ற சபதம் மேற்கொண்டவன்

பல பெயர்கள் இருந்தாலும் அனைவரும் அழைக்கும் பெயர் ஒன்றே


அது தான் “காதல்”

No comments:

Post a Comment